PHOTOSHOP

Wednesday, July 14, 2010

நண்பனுக்காக...


துள்ளி திரிந்த காலங்களை
எண்ணி எண்ணி பார்கிறேன்
விம்மி எழும் வார்த்தைகளை
ஒரு விடியலுக்குள் அடக்குகிறேன்
வெடித்து சிதறும் கண்ணீரை
யாரும் அறியாமல் நீக்குகிறேன்
தனிமையாய் நான் இருக்க
தவிப்பாய் உணர்கிறேன்
தள்ளி தள்ளி போகிறாய்
தளர்ந்து போய் நிற்கிறாய்
மௌனமாய் நான் இருக்க
மறந்ததாய் நினைக்கிறாய்
எண்ணற்ற உணர்வுகளை
எழுத்து வடிவில் தீட்டுகிறேன்
வர மறுக்கும் வார்த்தைகள்
அனைத்தும் கண்ணீராய் வருகிறது
துடைப்பதற்கு தெரியவில்லை
துணிந்து சொல்ல யாருமில்லை
அலை பேசியில் நாம்
பேசுகையில் நினைவுகளை மட்டுமே
பகிர்ந்து கொள்கிறோம்
நிஜங்கள் அனைத்தும் நிழுவையில்

நட்புடன் Jபாலன் ...

No comments: