தனிமையான
சில கணங்களில்
இதயத்தின் நான்கு
அறைகளிலிலும்
சூழ்ந்து கொள்ளும்
வெறுமையின் கனம்
தாங்க முடியாததாய் இருக்கிறது.
கனவுகளைத் தேடி
உறக்கத்துக்கு ஓடிய
விழிகளும் கூட
இப்போதெல்லாம்
வெறும் நினைவுகளை
சுமந்தபடி
விழித்திருப்பது.....
ஜோன்சன்.............
No comments:
Post a Comment