PHOTOSHOP

Friday, July 23, 2010

காத்திருக்கிறேன்

என் தந்தை யாரென தாயிடம்
கேட்க ஆசைப்பட்டேன் தாயோ நான்
காணும் முன்னே சென்று விட்டாள்
என்னை அனாதையாக விட்டுவிட்டு
அவளது வேதனைகள் யாரறிவார் ?
விட்டுவிட்டேன் நான் - கொடுத்தவன்
யாரென தேடிச் சென்று விட்டாளோ?
சுட்டெரிக்கும் வெயில் என்னை
வாட்டி எடுக்க - பசியோடு
நான் அழுகிறேன் அருகில்
அசைவச் சாப்பாடு இருந்தும்
எடுத்து உன்ன தெரியவில்லை
அருகில் இருக்கும் நாயகுட்டிகளோ
தன தாயோடு உணவு உன்ன
நான் மட்டும் அனாதையாய்
குப்பைதொட்டியில் கிடக்கிறேன்
என் கண்ணீரும் வற்றி விட்டது
அழுவதற்கும் ஜீவன் இல்லை
என்னை எடுத்து செல்வதற்கும்
யாருமில்லை!
என் எதிர்காலத்தை எண்ணியபடி
எதிர்பார்ப்போடு நான் பச்சிளம்
குழந்தையாய் குப்பை தொட்டியில்

உனக்காக நான்... Jபாலன்...




No comments: