PHOTOSHOP

Wednesday, June 30, 2010

எங்கே?

தமிழுக்கு ஒரு மாநாடு
ஆவலுடன் எதிர் பார்த்தேன்
தமிழை காணோம்
துவங்கி வைக்க!

Monday, June 28, 2010

எனது பாதை

பயணத்தை முடிக்க
எண்ணுகிறேன்
பாதைகள் முடிவதாய்
தெரியவில்லை
எடுத்து வைக்கும்
அடிகள் எல்லாம்
ஏதேதோ நினைவுகள்
கண்ணயர்ந்து நான்
உறங்கையில்
கனவுகள் கூட
வெறுமையாய்
விழி திறந்து
நோக்குகிறேன்
எனது பாதை
எதுவென்று.
Jபாலன்

Wednesday, June 23, 2010

கனவு

பெண்ணே!
தொட்டுவிடும் தூரத்தில்
நீ இருப்பாய் என
கைகளை நீட்டினேன்
தொலை தூரத்தில்
இருப்பது தெரியாமல்
உன்னை தழுவிய
தென்றல் வந்து
என்னை தழுவாதா
என கவிதை வாசித்தேன்
என்ன பயன்?
இங்கு அடிப்பதோ
அனல் கற்று
உன்னை கண்டுவிடும்
ஆவலில் கண்களை
திறந்தேன் கனவு கலைந்தது
உந்தன் நினைவுகள் மட்டும்
எந்தன் நெஞ்சினில் நிறைவாய்
என்ன செய்ய ?
நான் இருப்பது
தொலை தூரத்தில் அல்லவா?
காட்சிகளினால் காண
முடியாத உன்னை
வெறும் கனவுகளினால்
காண்கிறேன் உணர்வற்று
நான் உறங்கும் போது.

Jபாலன்.........

Sunday, June 20, 2010

எப்படி இருக்க?

மழை துளியாய் நீ இருந்தால்
உன்னை சேகரிக்கும்
நீலக் கடலாய் நான் இருப்பேன்!
வெண் மேகமாய் நீ இருந்தால்
உன்னை அரவணைக்கும் தென்றல்
காற்றாய் நான் இருப்பேன்!
மலராய் நீ இருந்தால்
உன்னை சுற்றி வரும்
வண்டாய் நான் இருப்பேன்!
கவிதையாய் நீ இருந்தால்
உன்னை வாசிக்கும்
வாசகனாய் நான் இருப்பேன்!
அன்புடயவளாய் நீ இருந்தால்
உந்தன் அடிமையாய் நான் இருப்பேன்!
துரோகியாய் நீ இருந்தால்
உன்னை அழித்துவிடும் எமனாய்
நான் இருப்பேன்!
கூறிவிடு அன்பே...
நான் எப்படி இருக்க?

கண்ணீர் ...

சாலை ஓரம் நான் நிற்கையில்
ஒரு குரல் தனது குழந்தைக்கு
உணவு வேண்டும் என்று
ஏமாற்று வேலை இது
என்றெண்ணி நான் மறுக்கையில்
பொங்கி வந்த கண்ணீரை
அவள் அடக்கி விரைந்து
அவ்விடம் விட்டுஅகலுகிறாள்,
அடங்க மறுக்கும் கண்ணீர்
பொங்கி அவள் கன்னங்களில்
வழிய
மற்ற யாரிடமும் யாசகம்
கேட்காமல் சென்று விட்டாள்
எனது உள்மனம் என்னை
அவளது நிலை உண்மை
என உசுப்பி விட
விரைந்தோடுகிறேன் நான்
என்னை விட விரைவாக
சென்றுவிட்டாள் அவள்
வெகு தொலைவில்
எனது கண்களில் கண்ணீர்
பெருக்கெடுத்து வழிய
அமைதியடைய மறுக்கிறது
என் மனது ( இன்றுவரை...)

Thursday, June 17, 2010

என்ன இது ?


உன்னை காண
என் மனம் துடிக்கிறது
உன்னை காணும் முன்னே
என்னை
கொன்றுவிட நீ துடிக்கிறாய் !
உன்னுள்
உள்ள என்னை எப்படி
கொல்வாய் என எதிர்பார்ப்போடு
காத்திருக்கிறேன்
நான்...
ஆனால், நீயோ என்னுள்
இருந்து கொண்டே
என்னை
கொல்வது தெரியாமல் !
அனைத்தும் அறிக்கையில் வெறும்
சடலமாக
கிடக்கிறேன் நான்
உந்தன்
கல்லறைக்கு அருகிலேயே....!
Jபாலன்.........