PHOTOSHOP

Friday, July 16, 2010

என்னவள் எங்கே?


தென்றலே கூறிவிடு - நீ
தழுவிய என்னவள் எங்கே?
நதியே கூறிவிடு - நீ
நனைத்த என்னவள் எங்கே?
பறவையே கூறிவிடு - நீ
பார்த்து வியந்த என்னவள் எங்கே?
மலரே கூறிவிடு - உன்னை
சூடிய என்னவள் எங்கே?
கவிதையே கூறிவிடு - உன்னை
எழுதிய என்னவள் எங்கே?
கொலுசின் ஒலியே கூறிவிடு - உன்னை
உருவாக்கிய என்னவள் எங்கே?
சூரியனே கூறிவிடு - உன்னை
மயக்கிய என்னவள் எங்கே?
நிலமகளே கூறிவிடு - உன்னை
மிஞ்சும் என்னவள் எங்கே?
நாட்களின் கிழமையே கூறிவிடு - உன்னை
கடந்த என்னவள் எங்கே?
புன்னகையே கூறிவிடு - உன்னை
உதிர்த்த என்னவள் எங்கே?

எதிர்பார்ப்புடன்.....

Jபாலன்...

No comments: