பெண்ணே!
தொட்டுவிடும் தூரத்தில்
நீ இருப்பாய் என
கைகளை நீட்டினேன்
தொலை தூரத்தில்
இருப்பது தெரியாமல்
உன்னை தழுவிய
தென்றல் வந்து
என்னை தழுவாதா
என கவிதை வாசித்தேன்
என்ன பயன்?
இங்கு அடிப்பதோ
அனல் கற்று
உன்னை கண்டுவிடும்
ஆவலில் கண்களை
திறந்தேன் கனவு கலைந்தது
உந்தன் நினைவுகள் மட்டும்
எந்தன் நெஞ்சினில் நிறைவாய்
என்ன செய்ய ?
நான் இருப்பது
தொலை தூரத்தில் அல்லவா?
காட்சிகளினால் காண
முடியாத உன்னை
வெறும் கனவுகளினால்
காண்கிறேன் உணர்வற்று
நான் உறங்கும் போது.
Jபாலன்.........
No comments:
Post a Comment